சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்குமே ரசிகர்கள் உள்ளார்கள்.
ஆனால் குறிப்பிட்ட சில சீரியல்கள் மக்களின் பேராதரவை பெற்றிருக்கும், அப்படி ஒரு சீரியல் தான் மூன்று முடிச்சு. சுந்தரவள்ளி என்பவரின் குடும்ப கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.

சுரேகா திருமணம், அவரது தோழி இறப்பு, சுந்தரவள்ளி கணவர் போலீஸ் வழக்கில் சிக்கியிருப்பது, நந்தினி படிப்பு என தொடர்ந்து பிரச்சனைகளாகவே இருக்கிறது, ஒரு விஷயத்திற்கும் தெளிவான தீர்வு இல்லை.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், நந்தினி மாதவியிடம் ரஞ்சித் மோதிரத்தை காட்டி கடையில் உங்களிடம் தவறாக நடந்துகொண்டது ரஞ்சித் தான் என்கிறார்.
அந்த விஷயத்தை மாதவி சுந்தரவள்ளியிடம் கூற அவர் கோபப்படுகிறார். பின் எனது அண்ணன் மகனையாக சந்தேகப்படுகிறாய் என அடித்து அவரை அனுப்பிவிடுகிறார்.

ரஞ்சித் நந்தினியை நேர்எதிர் சந்தித்து சுரேக்காவை வெளிநாடு அழைத்து செல்வேன் என மனதில் பேச நந்தினி உன் முகத்திரையை கிழிக்கிறேன் என உறுதி எடுக்கிறார்.
இதோ நாளைய மூன்று முடிச்சு சீரியலின் புரொமோ,
You May Like This Video