கர்ப்பமாக இருக்கும் செய்தியை பொங்கல் ஸ்பெஷல் தினத்தில் அறிவித்த சீரியல் நடிகை... போட்டோவுடன் இதோ
கிஷோர்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பசங்க.
இதில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் கிஷோர்.
முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் அடுத்து கோலி சோடா படத்தில் நடித்தார், ஆனால் அதன்பின் அவருக்கு சரியான படங்கள் கிடைக்கவில்லை.
திருமணம்
இந்த நிலையில் கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் பொங்கல் தினத்தில் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது ப்ரீத்தி குமார் மற்றும் கிஷோர் இருவரும் கர்ப்பமாக உள்ளார்களாம். அவர்கள் புகைப்படத்துடன் சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
