9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு
சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்பினார். சூழ்நிலை காரணமாக சுனிதா வில்லியம்ஸ் உடன் அவரது குழுவும் விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் இன்று பூமிக்கு திரும்பினார். 17 மணி நேரம் பயணத்திற்கு பின் இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரிமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம், கப்பலில் ஏற்பட்டது. பின் டிராகன் விண்கலத்தில் உள்ளே சுனிதா வில்லியம்ஸ் உடன் இணைந்து 4 வீரர்களும் வெளியே வந்த கையசைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த நான்கு பேரும் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மிக ஆரோக்கியமாக உள்ளார் என நாசா அறிவித்துள்ளது.
மாதவன் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில், 9 மாதங்களுக்கு முன் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ளது மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பதிவாக வெளியிட்டு வருகிறார்கள். இதில், நடிகர் மாதவன் சுனிதா வில்லியம்ஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
