அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... என்ன தெரியுமா?
அய்யனார் துணை
கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொடர் தான் அய்யனார் துணை. சில புதுமுகங்களை முக்கிய கதாபாத்திரமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடர் இப்போது தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரெட் தொடராக வலம் வருகிறது.
கடைசி எபிசோடில், பாண்டி-வானதி பெங்களூரில் திரும்பி வந்த காட்சிகள் தான் காட்டப்பட்டது.

அதாவது பாண்டி வேண்டாம் என கூறியும் கேட்காமல் அவருடன் வானதி பெங்களூரு சென்றார். இதனால் வீட்டிற்கு வர தாமதமானதால் வானதி வீட்டினர் பாண்டி வீட்டிற்கு வந்து பெரிய பிரச்சனை செய்துவிட்டனர்.
இதனால் பாண்டி, வானதியை திட்டிக்கொண்டே காரை ஓட்டி வந்து அவரை அவரது வீட்டில் விடுகிறார்.

குட் நியூஸ்
சீரியலில் நிலா-சோழன் வாட்ச் பிரச்சனை இன்னொரு பக்கம் பாண்டி-வானதி பிரச்சனை என சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது அய்யனார் துணை சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
குட் நியூஸ் என்னவென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தொடர்ந்து 1.30 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். ஆனால் இந்த செய்தி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
