விஜய் டிவியின் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு சில புதுமுக நடிகர்கள் நடிக்க தொடங்கப்பட்ட சீரியல் தான் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் முதலில் ஆரம்பமானதே 4 சகோதரிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு தான்.
ஆனால் இடையில் கதையின் ஹிட் ஜோடியாக விஜய்-காவேரி மாற சீரியல் கதைக்களமும் அவர்களை சுற்றியே நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது விபத்திற்கு பிறகு காவேரி அனைத்தையும் மறக்க விஜய் காவேரி இறந்துவிட்டார் என்ற சோகத்துடன் தனது மகளை வளர்த்து வந்துள்ளார்.

குட் நியூஸ்
தற்போது விஜய்க்கு காவேரி உயிருடன் இருப்பதும் தனது வீட்டார் செய்துள்ள விஷயங்களும் அவருக்கு தெரிந்துவிட்டது. சாரதா எல்லா உண்மையையும் கூற விஜய் இப்போது அம்முவின் அப்பாவாக காவேரிக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

இப்போது மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி என்னவென்றால், சீரியல் தொடங்கப்பட்டு இப்போது 800 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
இந்த சந்தோஷ செய்தி வெளியாக ரசிகர்கள் சீரியல் குழுவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.