பணம் தராமல் விஜய் டிவி அசார் மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலங்களை ஏமாற்றிய நபர்.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்
புத்தாண்டு நிகழ்ச்சி
நேற்று புத்தாண்டு கொண்டாட விழா சேலத்தில் நடைபெற இருந்தது. இந்த விழாவில் விஜய் டிவி அசார் போன்ற பிரபலங்களும், சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களும் பெர்ஃபார்மென்ஸ் பண்ணவிருந்தனர்.
ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்திய சாய் கார்த்திக் என்பவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லையாம். நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு டிக்கெட் விற்பனை ஆகாத காரணத்தினால் யாருக்கும் சம்பளம் தராமல் இருந்துள்ளார்.
ஏமாற்றிய நபர்
முதலில் பெர்ஃபார்மென்ஸ் பண்ணுங்க அதுக்கு பிறகு காசு தருகிறேன் என கூறி ஏமாற்றியுள்ளார். பெர்ஃபார்மென்ஸ் நடக்காத காரணத்தினால் நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களும் தங்களுடைய டிக்கெட்களின் காசை திரும்ப கேட்டுள்ளனர்.
அதையும் நிகழ்ச்சியை நடத்திய சாய் கார்த்திக் என்பவர் தராமல் ஏமாற்றியுள்ளார். ஆர்ட்டிஸ்ட் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இப்படியொரு சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.