ஒரு பரீட்ச உங்களோட உயிரை விட பெருசில்ல.. நடிகர் சூர்யா அதிரடி பேச்சு
நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மாணவ மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் கூட தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் பாஸ் ஆகாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து இதனை போல் பல சம்பவங்கள் தமிழகத்தில் நாதனிப்பெற்று வருவதால், பலரும் இதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கையும், தெரியமும் தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், " அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே.. ஒரு பரீட்சை உங்களோட உயிரை விட பெரிதில்லை. தற்கொலை உங்களை புடிச்சவங்களுக்கு நீங்க கொடுக்குற வாழ்நாள் தண்டனை. நானும் நிறைய பரீட்சையில் மோசமான மதிப்பெண் எடுத்திருக்கேன். மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிக்கிறதுக்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கு.." என்று் தற்கொலைக்கு எதிராக ஒளித்துள்ளார்.
என் தம்பி தங்கைகளுக்கு…
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2021
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… pic.twitter.com/jFOK9qxqyN