பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அவர் சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நிலையில் அதன் பின் படத்தில் இருந்து விலகினார்.
அதன் பின் அருண் விஜய்யை வைத்து பாலா அந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார். வணங்கான் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஜனவரி 10, 2025 அன்று ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்று வணங்கான் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் சூர்யாவும் கலந்துகொண்டார்.

பாலாவுக்கு நன்றி சொன்ன சூர்யா
"மேடையில் பேசிய சூர்யா பாலா மூலமாக தான் தனது வாழ்க்கை மாறியது என கூறி இருக்கிறார். பாலா சார் சேது படத்திற்கு பிறகு என்னை வைத்து படம் இயக்குவதாக கூறினார். நந்தா பார்த்துவிட்டு காக்க காக்க படத்திற்காக கெளதம் மேனன் கூப்பிட்டார்."
"அதை பார்த்துவிட்டு முருகதாஸ் சஞ்சய் ராமசாமியாக நடிக்க கூப்பிட்டார். பாலா சாரிடம் இருந்து 2000ல் எனக்கு போன் கால் வரவில்லை என்றால் இதெல்லாம் இல்லை" என சூர்யா பேசி இருக்கிறார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    