நடிகர் சூர்யா, ஜோதிகாவின் ரீல் மகளா இது..! அனைவரையும் ஷாக் ஆக்கிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடி, இதன்பின் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
இதில், அனைவரின் மனதையும் கவர்ந்த படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு ரீல் மகளாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.
இந்நிலையில், சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நடிகை ஸ்ரேயா ஷர்மா தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..