வாடிவாசல் நிலை என்ன?.. விடுதலை பட நடிகர் கொடுத்த வெறித்தனமான அப்டேட்
சூர்யா
சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு 'ரெட்ரோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது.
தற்போது, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 - வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடந்து முடிந்தது.

அதன் பின், படம் குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. இதனால் படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல் உலா வர தொடங்கியது.
இந்நிலையில், தற்போது, வாடிவாசல் படம் குறித்து இயக்குனரும், நடிகருமான தமிழரசன் ஒரு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
வெறித்தனமான அப்டேட்
அதில், "வாடிவாசல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்க சொல்லி வெற்றிமாறன் சார் என்னிடம் கூறினார்.

தற்போது, நான் கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தின் தேதி மற்றும் வாடிவாசல் படத்தின் தேதி இரண்டுக்கும் பிரச்சனை வராது என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார். இதனால், வாடிவாசல் படம் ட்ராப் ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri