நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா?
நீட் தேர்வு
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை எதிர்த்து டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது.
அமைதியாக போராடி வந்த மாணவர்களை டெல்லி போலீசார் தடியடி அடித்தும், கண்ணீர் புகை வீசியும் தாக்கிய சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. அமைதியாக நேர்மையான விஷயத்திற்காக போராடிய மாணவர்களை எப்படி அடிக்கலாம், இது தவறு என மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது, பிரதமர் மோடியும் இந்த நீட் தேர்வு வினாத்தாள் லீக்கானது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் போராட்டக்காரர்கள் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என தங்களது நிலையில் உறுதியாக உள்ளனர்.
சூர்யா முடிவு
ஜுலை 23, தமிழக ரசிகர்கள் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகியிருப்பதால் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர் சூர்யாவின் 51வது பிறந்தநாள் இன்று, அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அதோடு விஸ்வநாத் அன் சன்ஸ் படக்குழுவும் சூர்யாவிற்கு வாழ்த்து கூறி இருந்தனர்.

ஆனால் நடிகர் சூர்யா என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். எனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராடுவதை சுட்டிக்காட்டி சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.