பாலா படத்தை மேலும் தள்ளிப்போடும் சூர்யா! காரணம் இதுதான்
நடிகர் சூர்யா மற்றும் பாலா இருவரும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படம் டிராப் ஆகி விட்டது என்று கூட சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
கன்னியாகுமரியில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு செட்டில் பாலா - சூர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் முதலில் பரவிய நிலையில் தான் அதன் பின் படம் டிராப் ஆகிவிட்டது என கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் சூர்யா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்விட்போட்டிருந்தார் . விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார் அவர்.

இந்நிலையில் சூர்யா தற்போது பாலா படத்தின் ஷூட்டிங்கை மேலும் தள்ளிப்போட்டிருக்கிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு டூர் செல்ல இருக்கிறார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தான் பாலா பட ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பார்.
கோவாவில் அடுத்தகட்ட ஷூட்டிங் ஒரு மாதம் நடைபெற இருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவனா இது ! இளம் வயதில் அவர் நடித்த முதல் படத்தில் எப்படி உள்ளார் பாருங்க..