வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா? வெற்றிமாறன் கொடுத்த பதில்

By Parthiban.A Apr 12, 2024 01:30 PM GMT
Report

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் நீண்ட காலத்திற்கு முன் அறிவிக்கப்பட்ட படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு காளை உடன் சூர்யா இருக்கும் டெஸ்ட் ஷூட்டும் அப்போது நடந்தது.

இந்த படத்திற்கு தயாராக சூர்யா ஜல்லிக்கட்டு காளையை தனது வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். படத்திற்காக பயிற்சியும் பெற்று வந்தார்.

அறிவிப்பு வந்து நீண்ட காலம் ஆகியும் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில் அது டிராப் ஆகிவிட்டதாக செய்தி அடிக்கடி வருகிறது.

சூர்யா தற்போது கங்குவா, புறநானூறு, கார்த்திக் சுப்புராஜ் படம் என படுபிசியாக இருப்பதால் வாடிவாசல் தொடங்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா? வெற்றிமாறன் கொடுத்த பதில் | Suriya Vaadivaasal Not Dropped Says Vetrimaaran

வெற்றிமாறன் விளக்கம்

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது வாடிவாசல் பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

"தற்போது எடுத்துவரும் விடுதலை 2 படமே எப்போது வெளியாகும் என எனக்கு தெரியவில்லை. அதை முடித்து வாடிவாசல் பணிகள் இருக்கிறது. அதன் பிறகு தான் வடசென்னை 2 பற்றி யோசிக்க முடியும்" என கூறி இருக்கிறார்.

அதனால் வாடிவாசல் ட்ராப் ஆகவில்லை என அவர் உறுதி செய்து இருக்கிறார்.   

வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா? வெற்றிமாறன் கொடுத்த பதில் | Suriya Vaadivaasal Not Dropped Says Vetrimaaran

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US