பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலாவுடன் இணையும் சூர்யா ! அவரே வெளியிட்ட பதிவு..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இதனிடையே தற்போது சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த திரைப்படம் குறித்து அறிவித்துள்ளார்.
அதில் "என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான், அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன், அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்".
இதனை சூர்யா இயக்குனர் பாலா மற்றும் சிவகுமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
— Suriya Sivakumar (@Suriya_offl) October 28, 2021
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… pic.twitter.com/H9wyutZD3h