4 மொழிகளில் உருவாகும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் - வெளியான சூப்பர் அப்டேட்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜெய்பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருத்தன் பட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.
நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்படும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.