ரயிலில் இருந்து விழுந்து புஷ்பா பட நடிகை பலி! அதிர்ச்சியில் திரையுலகம்

Death Tollywood Train Accident Jyothi Reddy Telugu actress
By Parthiban.A Jan 20, 2022 12:00 PM GMT
Report

ஆந்திராவை சேர்ந்த ஜோதி ரெட்டி என்ற துணை நடிகை ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியாகி இருக்கும் சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் டான்சர் ஆக ஆடி இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

26 வயதாகவும் அவர் கடப்பாவில் இருந்து ஹைதராபாத்துக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அவர் ஷாத்நகர் ரயில்வே நிலையம் அருகில் ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்கிறார். அதிகாலை 5.30க்கு ரயில் Shadnagar ஸ்டேஷன் வந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த ஜோதி ரெட்டி, அது கச்சிகுடா ஸ்டேஷன் என நினைத்து இறங்கிவிட்டார்.

அதன் பின் வேறு ஸ்டேஷன் என அறிந்து மீண்டும் ரயிலில் ஏற முயற்சித்து இருக்கிறார். அவர் தவறி விழுந்த தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவரை ரயில்வே ஊழியர்கள் மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர். ஆனால் ஜோதி ரெட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறி இருக்கின்றனர்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜோதி ரெட்டியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். அது விபத்து என்றால் ஏன் சிசிடிவி காட்சி வெளியாகவில்லை என கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்த ஸ்டேஷனில் சிசிடிவி இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US