தலைவி 2 உருவாகிறதா.. படத்தில் பணியாற்றிய முக்கிய நபர் அதிரடி பேட்டி
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக தலைவி வெளியானது.
ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தலைவி படத்தில் பணியாற்றிய பாலிவுட் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் ஒரு பேட்டியில், தலைவி-2 உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு படம் முடிந்துவிட்டது.
இரண்டாம் பாகத்தில் அரசியலில் அவர் சந்தித்த வெற்றி தோல்வி, போராட்டங்களை சொல்லப் போகிறோம்.
அதனால் தலைவி 2 படம் குறித்து கங்கனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஓகே சொல்லிவிட்டால் இரண்டாம் பாகத்திற்கான கதைப்பணிகளை தொடங்கி விடுவோம் என்று கூறியுள்ளாராம்.