'இதனால் தான் மக்களுக்கு அவரை பிடிக்கிறது' - தளபதி விஜய் குறித்து பேசிய கே.ஜி.எப் பட புகழ் யஷ்..!
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கே.ஜி.எப். எந்த வித எதிர்பார்ப்புமின்றி வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் முடிந்துள்ள நிலையில் அப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமான நடிகர் யஷ் ஒரு பேட்டியில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.
ஆம் விஜய் குறித்து கூறுகையில், "அவருக்கு மிக பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தும் கூட அவர் எப்போதுமே சிம்பிளாக உள்ளார்.
இதனை வருடங்களாக மக்கள் அவரை இன்னும் ரசித்து வந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால், அது அவரிடம் உள்ள நல்ல குணத்தை காண்பிக்கிறது. நான் அவருடைய எல்லா திரைப்படங்களையும் பார்த்துளேன்" என கூறியுள்ளார்.