குக் வித் கோமாளி மணிமேகலைக்கு இப்படி தான் விபத்து நடந்ததாம், அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 2, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
இதனிடையே இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2-ல் தற்போது கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, அஸ்வின் என ஐந்து முக்கிய போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோமாளியாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் மணிமேகலை, இவருக்கு அண்மையில் விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 வாரம் கலந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது தனது கணவர் உசேன் உடன் லைவ் வந்துள்ள மணிமேகலை தனக்கு நடந்து விபத்து குறித்து கூறியுள்ளார். ஆம், மணிமேகலை தனது வீட்டில் இருந்த போது வெந்நீரை வேறு பாத்திரத்தில் உற்ற முயற்சித்துள்ளார்.
அப்போது மொத்தமாக வெந்நீரை காலில் ஊற்றிக்கொண்டராம். இதனால் அவரின் கால் தோள்கள் பிரிந்த வர தொடங்கியுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.