மர்ம நபர்கள் மோசடி.. மெர்சல் தயாரிப்பாளர் வெளியிட்ட 'எச்சரிக்கை' நோட்டீஸ்
விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் அடுத்து மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற படத்தை தயாரிக்க இருந்தது. சுந்தர் சி இயக்க இருந்த அந்த படம் அறிவிப்போடு நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் தேனாண்டாள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
"சில நபர்கள் சங்கமித்ரா படத்துடன் தொடர்பு இருப்பவர்கள் போல் பொய்யாக ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதற்கும் தேனாண்டாள் நிறுவனத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை."
"அப்படிப்பட்ட நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்த சட்டவிரோத செயலால் ஏற்படும் இழப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல" என அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
Clarification on the ongoing circulation of our feature #Sangamithra
— Thenandal Films (@ThenandalFilms) January 12, 2022
#TSL #PressNotice @MuraliRamasamy4 @Hemarukmani1 #SundarC pic.twitter.com/kYOKSS4FQK