"கடுமையான விமர்சனத்தால் நான் இப்படியெல்லாம் செய்துள்ளேன்" - நடிகை சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்..
நடிகை சமந்தா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை சமந்தா சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. கடைசியாக விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில் தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த சமந்தா, ரசிகர் ஒருவர் அவரின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சமந்தா "முன்பெல்லாம் கடுமையான விமர்சனங்களால் பல இரவுகள் நான் தூங்காமல் இருந்துளேன். ஆனால் தற்போது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது" என கூறியுள்ளார்.