நானும் மனுஷன் தான்.. பதவியை ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியன்

By Parthiban.A Nov 16, 2023 10:20 AM GMT
Report

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சுப்ரமணியம். அவர் லியோ ரிலீஸ் நேரத்தில் அளித்த பேட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியது. லியோ தயாரிப்பாளர் சொன்ன வசூல் விவரங்கள் பொய், தியேட்டர் காரர்களுக்கு நஷ்டம் தான் என அவர் பேட்டி அளித்து இருந்தது.

அதனால் அப்போது இருந்தே விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர். மேலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டைகர் 3 படத்தை திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான தியேட்டரில் அனுமதி இன்றி காலை 7 மணிக்கும் இரவு 11.50க்கு காட்சி திரையிட்டதாக நெட்டிசன்கள் ட்விட்டரில் ஆதாரத்துடன் புகார் கூறினார்கள்.

அதனால் அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

நானும் மனுஷன் தான்.. பதவியை ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியன் | Tirupur Subramaniam Resign Theatre Owners Assoc

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

பதவி விலகல்

இந்நிலையில் தற்போது திருப்பூர் சுப்ரமணியன் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

சொந்த வேலை காரணமாக பதவி விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 'நானும் மனிதன் தான், 100% தவறு இல்லாமல் இருக்க முடியாது' எனவும் இந்த சர்ச்சை பற்றி கூறி இருக்கிறார் அவர். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US