TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்
சன் டிவி
சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியல்களுக்கு இடையே TRPயில் கடும் போட்டிகள் நிலவி வருகிறது, கடந்த வாரம் முதல் இடத்தை பிடித்த எதிர்நீச்சல் இந்த வாரம் இரண்டாவது இடத்திலும் கயல் சீரியல் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
இப்படி சன் தொலைக்காட்சி சீரியல்களுக்குள்ளேயே போட்டிகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு காலத்தில் TRPயில் டாப்பில் வந்த சுந்தரி சீரியல் குறித்து ஓரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
அதாவது தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், இந்த தகவல் இப்போது தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தையும் கொடுத்துள்ளது

நடிகர் ரகுவரனின் கடைசி நாட்களில் நடந்த சோகம்- முதன்முறையாக கூறிய அவரது சகோதரர்
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri