கேரவனில் 20 வயது நடிகை தூக்கிட்டு தற்கொலை! இறுதிச்சடங்கில் மயக்கமான அம்மா
சமீப காலமாக சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் தற்கொலை என்பது தொடர்கதையாகிவிட்டது.
நடிகை தற்கொலை
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலைசெய்துகொண்டார் . அது கொலை என போஸ்ட் மார்ட்டம் செய்த நபர் அளித்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் 20 வயதே ஆன ஹிந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா சமீபத்தில் அவரது கேரவனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரை காதலித்து ஏமாற்றியதாக காதலன் ஷீசன் கான் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது ஐபிசி 306ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. லவ் ஜிகாத் தான் காரணம் என புகார் எழுந்திருக்கும் நிலையில் அது பற்றியும் விசாரணை நடக்கிறது.

இறுதி சடங்கு, மயக்கமான தாய்
இந்நிலையில் இன்று துனிஷா ஷர்மாவின் இறுதி சடங்கு நடைபெற்றது. அதில் துனிஷாவின் அம்மா மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். அவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி வந்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

