23 வயது டிவி நடிகை தற்கொலை.. இரண்டே வாரத்தில் காதலரும் தற்கொலை! அதிர்ச்சி தகவல்
பிரபல ஓடியா மொழி டிவி நடிகை ராஷ்மிரேகா ஓஜா என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது காதலர் சந்தோஷ் பத்ராவும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சந்தோஷ் தூக்கிட்டதை பார்த்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
சந்தோஷ் பத்ராவும் ஒடியா மொழி சினிமா துறையில் தான் பணியாற்றி வருகிறார். அவர்கள் இருவரது மரணத்திற்கும் பின்னணியில் என்ன இருக்கிறது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை ராஷ்மிரேகா மரணத்திற்க்கு பின் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.