இரண்டு முறை அபார்ஷன்.. பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகன் உருக்கம்
சுஜாதா
இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் சுஜாதா. இவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சுஜாதா சிறுவயதிலிருந்தே பாட்டு பாடும் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
இவர் 18 வயதாக இருக்கும் போதே கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் உள்ளார். தற்போது இவரும் பிரபல பாடகியாக வலம் வருகிறார்.

அபார்ஷன்
சுஜாதா பேட்டி ஒன்றில், "எனக்கு இரன்டு முறை அபார்ஷன் ஆனது. இதன் பின்னர் ஸ்வேதா மோகன் பிறந்தார். அப்போது சினிமாவில் பிஸியாக இருந்ததால் ஸ்வேதா மோகனை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை".
"மேலும் அவரின் பள்ளி, கல்லூரி விழாவிற்கு கூட போனதில்லை. தற்போது நான் ஸ்வேதாவின் குழந்தையிடம் நேரத்தை செலவிட்டு வருகின்றேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

AK 62 படத்தின் வில்லனாக நடிக்க போவது இந்த பிரபலங்கள் தானா? எகிறும் எதிர்பார்ப்பு