இதுவரை யார் திருமணத்திலும் நடக்காத விஷயம் அஜித்-ஷாலினி கல்யாணத்தில் நடந்தது- பிரபலம் கூறிய தகவல்
அஜித்-ஷாலினி
தமிழ் சினிமாவில் ரீல் ஜோடிகளாக படங்களில் நடித்து பின் அவர்களுக்குள் காதல் ஏற்பட நிஜத்தில் இணைந்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி இவர்கள் நிஜத்திலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட அவர்களுக்குள்ளும் காதல் வந்து திருமணம் செய்த ஜோடி தான் அஜித்-ஷாலினி.
அமர்க்களம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இயக்குனர் சரணிடம் அஜித், சீக்கிரம் படம் எடுத்து முடித்துவிடுங்கள், இல்லையென்றால் இவரை காதலித்துவிடுவேன் என ஷாலினி முன்பே இதனை கூறியுள்ளார்.
அது படம் முடிவதற்குள் நிஜமாக ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஆனால் அவரோ தனது அப்பாவிடம் பேசுங்கள் என கூறியிருக்கிறார். பின் எப்படியோ இருவரின் காதலுக்கு அவர்களது வீட்டில் சம்மதிக்க திருமணம் நடந்தது.
இப்போது அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
புதிய தகவல்
எந்த ஒரு நட்சத்திரத்தின் திருமணத்திலும் நடக்காத ஒரு விஷயம் அஜித்-ஷாலினி கல்யாணத்தில் நடந்ததாம்.
நட்சத்திரங்களில் திருமணத்திற்கு பிரபலங்கள் வருவது வழக்கம் ஆனால் வருபவர்கள் பெரும்பாலும் சாப்பிட மாட்டார்கள். அவர்களது கார் ஓட்டுநர்களுக்கு சாப்பிட ஆசையாக இருந்தாலும் சாப்பிட முடியாதாம்.
அஜித் திருமணத்தில் விஜபிக்களின் கார் வந்து நிற்கும் இடத்தில் அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுநருக்கு கையோடு கல்யாணத்தில் போடப்படும் சாப்பாட்டை ஒரு கவரில் வைத்தும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டதாம்.
இதனால் அந்த ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதுவரை எந்த நட்சத்திர கல்யாணத்திலும் இப்படி ஓரு விஷயம் நடக்கவில்லை.
அஜித் திருமணத்தில் முதலில் நடந்த விஷயம் அடுத்து சூர்யா-ஜோதிகா திருமணத்தில் நடந்ததாம். இந்த தகவலை பிஆர்ஓ நிகில் முருகன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.