அஜித்தின் வாலி படத்தால் முதல்நாள் படப்பிடிப்பிலேயே தற்கொலை முடிவு எடுத்த எஸ்.ஜே.சூர்யா- நடந்தது இதுதானாம்
அஜித்தின் வாலி
90களில் இருந்தவர்களுக்கு அப்போது வந்த ஒருசில படங்களை இப்போதும் ரசித்து பார்ப்பார்கள். அப்படி ஒரு படம் தான் 1999ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி.
அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் என பலர் நடிக்க வெளியான இப்படத்தில் தேவா இசையில் வந்த அனைத்து பாடல்களுமே செம ஹிட்.
பாடல்கள், பாடலுக்கு அமைக்கப்பட்ட நடனம் என அனைத்துமே கொண்டாடப்பட்டது.
இதுவரை தெரியாத தகவல்
இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அடையாறு போட்கிளவுஸில் இருக்கும் ஒரு வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது விருந்தாளிகள் வருவதால் வீடு தர முடியாது என வீட்டு ஓனர் மறுத்துள்ளார்.
என்னோட முதல் படம் சார், முதல்நாளே படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால் சென்டிமென்ட்டாக படத்தையே நிறுத்திவிடுவார்கள் என எவ்வளவு கேட்டும் ஓனர் மறுத்துள்ளார்.
பின்னர் ஓகே சார், நீங்கள் வீடு தர வேண்டாம், நாளை காலையில் ஜன்னல் வழியே பாருங்கள், வெளியில் உள்ள மரத்தில் நான் பிணமாக தொங்குவேன் என்று சொல்லி ஓனரை சம்மதிக்க வைத்துள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.
விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் அதிகம்- வாரிசு பட ரிலீஸ் குறித்து மாஸ் தகவல்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
