பிரபல நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஊர்வசி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பரிமளா & கோ' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தேஜாலட்சுமி ஊர்வசி நாயர்
இந்நிலையில், நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலட்சுமி ஊர்வசி நாயர் தற்போது கன்னட திரையுலகில் 'புல்லி' (Bully) என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தில் புவன் பொன்னன்னாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கதை
டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் அனுப் ஆண்டனி இயக்குகிறார். தாய் - மகன் உறவை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஊர்வசி ரீ-என்ட்ரி
இப்படத்தில் புவன் பொன்னன்னாவுக்கு அம்மாவாக நடிகை ஊர்வசி நடிக்கிறார். இதன் மூலம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
