அட்டர் நான்சென்ஸ்.. விஜய் இழப்பீடு தர வேண்டும்: கொந்தளித்த நடிகர் விஷால்
நடிகர் விஜய் கரூரில் மக்களை சந்தித்தபோது நடத்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் பலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
அட்டர் நான்சென்ஸ்: Vishal
இந்த சம்பவம் பற்றி நடிகர் விஷால் ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். "அட்டர் நான்சென்ஸ். நடிகர்/அரசியல்வாதி விஜய் பிரச்சாரத்தில் 30 பேருக்கும் மேல் உயிரிழந்தது நெஞ்சை உடைகிறது, அது சரியானது அல்ல."
"விஜய் இழப்பீடு தர வேண்டும், அது தான் அவர் செய்யக்கூடிய குறைந்தபட்ச ஒரு விஷயமாக இருக்கும்" என விஷால் கூறி இருக்கிறார்.
Utter nonsense. Hearing that more than 30 people including children losing their lives over a stampede in actor/politician Vijay’s rally is heartwrenching and totally not right.
— Vishal (@VishalKOfficial) September 27, 2025
My heart goes out to every one of those innocent victims and my deepest condolences to every one of…