விஜயகாந்த் மறைவிற்கு நிஜமாக வராதது ஏன்.. பிரபலத்திடம் கூறி வருத்தப்பட்ட வடிவேலு
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் கேப்டனாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
சினிமாவில் சாதித்தவர் அப்படியே அரசியல் பக்கம் வந்து மக்களுக்கு சேவை செய்ய போராடினார், தேமுதிக கட்சியை தொடங்கிய வேகத்தில் எதிர்க்கட்சியாக வளர்ந்தார். அசுர வேகத்தில் வளர்ந்த விஜயகாந்திற்கு அவரது உடல்நிலை பிரச்சனை கொடுத்தது.
இதனால் வீட்டிலேயே முடங்கிய விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக் கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

வடிவேலு பேச்சு
விஜயகாந்திற்கு ஏராளமான பிரபலங்கள் இறுதிய அஞ்சலி செலுத்த வந்தார்கள், ஆனால் கேப்டனால் திரையுலகில் அதிக வாய்ப்புகள் பெற்று வளர்ந்த வடிவேலு வரவில்லை என்பது பெரிய விவாதமாக மாறியது.

வடிவேலு மாரீசன் படப்பிடிப்பில் சக நடிகர் மதுரை என்பதால் அவரிடம் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். மாரீசன் படத்தில் வடிவேலு மகனாக குரு லக்ஷ்மன் நடித்துள்ளார். அவரிடம் வடிவேலு, மனுஷன் இறந்ததுக்கு கூட என்னால் போக முடியவில்லை, நான் போய் இருக்கலாம்.
நான் போய் இருந்தாலும் அவரை இவ்ளோ திட்டிட்டு எதுக்கு வந்தான்னு தப்பா தான் பேசுவாங்க. ஆனால் மனதார கூறுகிறேன், அவர் சொர்கத்தில் இருப்பார் என கூறியுள்ளார்.