வலிமை வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி! நிம்மதியான அஜித் ரசிகர்கள்
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர்களுக்கு நாடு முழுவுதும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வடநாட்டில் பல மாநிலங்களில் தியேட்டர்கள் மீது கட்டுப்பாடுகளை போடப்பட்டு உள்ளது. மேலும் இரவு லாக்டவுனும் போடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் தற்போது தியேட்டர் இருக்கைகள் 50% மட்டுமே நிரப்ப வேண்டும் என அரசு கட்டுப்பாடு அறிவித்து உள்ளது. அதனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ஆர்ஆர்ஆர், வலிமை போன்ற படங்கள் பின்வாங்க போவதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படக்குழு இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. வலிமை திட்டமிட்டபடி ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்து உள்ளனர்.
இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்து இருக்கின்றனர். இருப்பினும் 50% கட்டுப்பாடு என்பதால் வலிமை படத்தின் முதல் நாள் வசூலில் பெரிய பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தடையை தாண்டி வலிமை வசூல் சாதனை படைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.