வள்ளியின் வேலன் சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிரபலம்.. பெண்களிடம் தவறாக நடந்தாரா?
வள்ளியின் வேலன்
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று வள்ளியின் வேலன்.
இந்த தொடரில் திருமணத்திற்கு பின் ஒன்றாக இணைந்து சித்து-ஸ்ரேயா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் கதைக்களத்தில் விறுவிறுப்பு அதிகமாக கதைக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
முக்கிய தகவல்
இந்த தொடரின் இயக்குனர் பிரதாப், நட்சத்திரங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நாயகன்-நாயகி தாண்டி மற்ற அனைவருடனும் மரியாதையின்றி ஒருமையில் பேசுகிறார், காரணமின்றி திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஒரு நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சர்ச்சை விவகாரம் சேனல் நிர்வாகத்திடம் செல்ல, அதிர்ச்சியடைந்த நிர்வாகம் இயக்குனரை வள்ளியின் வேலன் தொடரில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொடரின் புதிய இயக்குனராக ஜீவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
