நடிகை நயன்தாரா செய்தது நியாயமா, அவரை கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் நடிகையை வம்பிழுக்கும் வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் 4வது திருமணம் செய்கிறார் என்ற செய்தி கடந்த வாரம் வைரலானது.
ஆனால் அவர் பிக்கப் டிராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் நடிக்கும் படத்திற்காக திருமண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார்.
அந்த புகைப்படங்கள் தான் வனிதா திருமணம் குறித்து வந்த வைரல் செய்திக்கு காரணம். தற்போது என்னவென்றால் நயன்தாரா கூட ராஜா ராணி திரைப்படத்திற்காக ஆர்யாவுடன் திருமணம் என புரொமோஷன் செய்தார்.
அப்போது அவரை கேட்க யாருக்காவது தைரியம் இருந்ததா, இப்போது மட்டும் கேட்கிறீர்கள்.
அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என ஒரு சிலர் கேட்க, அதை பிடித்துக்கொண்ட வனிதா...அதானே 'இதை மறந்துட்டேனே' என்று கலாய்த்துள்ளார்.
தற்போது நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் அவரது கமெண்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.