நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகார்.. என் கையெழுத்தை போட்டு ஏமாத்துறாங்க
நடிகை வனிதா என்றால் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தற்போது அவர் Mrs & Mr என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார். அதில் ராபர்ட் மற்றும் வனிதா ஆகியோர் ஜோடியாக நடித்து இருக்கின்றனர்.
அந்த படத்தில் அவர்கள் திருமணம் செய்வது போன்ற காட்சியும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.
போலீசில் புகார்
இந்நிலையில் வனிதா மீது தன்ராஜ் என்ற நபர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். சாட்டிலைட் உரிமைக்காக 40 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்து வனிதா ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் அளித்திருக்கிறார்.
ஆனால் அந்த நபர் யாரென்றே எனக்கு தெரியாது எனவும் தந்து கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது எனவும் வனிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.