நடிகை என்பதை தாண்டி புது அவதாரம் எடுத்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்
நடிகர் சிம்புவின் போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த வருடம் வரலட்சுமி நடிப்பில் Rizana- A Caged Bird என்ற படம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் தயாராகி வருகிறது.
புதிய அவதாரம்
நாயகியாக கலக்கிவரும் வரலட்சுமி சரத்குமார் இப்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
அவர் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமாக போகிறார். தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து, தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அதில் உருவாகும் சரஸ்வதி என்ற படத்தின் மூலம் வரலட்சுமி இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.