15 வருடங்கள் நிறைவு: வெங்கட் பிரபு உருக்கமான நன்றி! முழு அறிக்கை இதோ
இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் நுழைந்து 15 வருடங்கள் ஆவதை நினைவு கூர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.
இந்த நாள் ஓர் இனிய நாளாக இருப்பதற்கு காரணம் எஸ்பிபி சாரின் ஆசீர்வாதமும் என் நபர் சரணின் நம்பிக்கையும்தான். 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அவர்கள் 'சென்னை 600028' மூலம் என் திரைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்கள். அதனால் தான் வெங்கட் பிரபு என்கிற நானும் சினிமா எனும் பெருங்கடலில் இன்று பதினைந்தாம் ஆண்டை நிறைவு செய்கிறேன்.
நான் சினிமாவும்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். பிரபலமான இயக்குனர்களிடம் இருந்து சினிமாவைக் கற்றுக்கொள்ளும் சூழல் எனக்கு அமையவில்லை. அனாலும், புதுப்புது முயற்சிகள் செய்வதில் எனக்கிருக்கும் ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை. அந்த முயற்சிகளில் சில படங்கள் வெற்றி பெற்றன; சில படங்கள் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தன.
எது எப்படி இருந்தாலும், நான்கைந்து வருடங்கள் இடைவெளி இருந்தாலும்கூட, வெங்கட் பிரபு என்கிற ஒரு மனிதனை ஒருபோதும் மறந்துவிடாமல், நான் ஒரு படத்தோடு வரும்போதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள் மனதார வரவேற்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினவு நாளை எதிர்நோக்கும் இந்த வேளையில் என் சினிமா பயணத்தை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.
என்னோடு என்றும் துணை நிற்கும் தயாரிப்பாளர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி!
அன்புடன் வெங்கட் பிரபு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
🙏🏽🙏🏽🙏🏽 #15YearsofChennai28 @charanproducer @thisisysr @sakthisaracam @Cinemainmygenes @Premgiamaren @vasukibhaskar @JKSaravana @actorshiva @Actor_Jai @Nitinsathyaa @aravindaakash @ajayraaj @iamvijayvasanth @vgyalakshmi pic.twitter.com/GtAnyBvL0a
— venkat prabhu (@vp_offl) April 27, 2022
Thank q!! Thank q!! Thank q!! 🙏🏽🙏🏽🙏🏽 love you all❤️❤️❤️❤️❤️#15YearsofVP #15YearsofVenkatPrabhu pic.twitter.com/XSWx0gZKTT
— venkat prabhu (@vp_offl) April 27, 2022