சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படம்.. வெங்கட் பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மாதரசி மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

மாஸ் அப்டேட்
சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்த நிலையில், இப்படம் குறித்து 'தலைவன் தலைவி'' பட இசைவெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில்" சிவகார்த்திகேயனுடனான தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும்" என்று கூறியுள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan