எத்தனை பேர் செத்துப்போனாங்க.. துரந்தர் 2 படத்தை தாக்கி பேசிய வெற்றிமாறன்!
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவர். அவரது படங்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
வெற்றிமாறனின் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து அங்கும் ஹிட் ஆவதை பார்த்திருக்கிறோம். மேலும் பல கருத்துக்களையும் தைரியமாக பேசக்கூடியவர் வெற்றிமாறன்.

காட்டமான பேச்சு
இந்நிலையில் துரந்தர் 2 படத்தை Propaganda படம் என மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் வெற்றிமாறன். ஒரு படத்தின் விழாவில் பேசிய அவர் propaganda படங்கள் மூலமாக மக்களின் நினைவுகளையே மாற்றிவிடுகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
"இப்போ எல்லாமே propaganda ஆக மாறுகிறது. Propaganda has the power to influence memory. Memory is so fickle. எல்லாருக்குமே தெரியும் Demontisation (500, 1000 ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு)-ஆல் யார் அதிகமாக யார் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எத்தனை பேர் பணத்தை மாற்றுவதற்கு வரிசையில் நின்று இறந்துபோனார்கள் என தெரியும். ஆனால் அதை ரொம்ப ஈசியாக propaganda பிரச்சார படங்கள் மூலம் மாற்றிவிட முடியும்.
இவ்வாறு வெற்றிமாறன் காட்டமாகப் பேசி இருக்கிறார்.

ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri