மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.. வெறித்தனமாக உருவாகும் இரண்டாம் பாகம்
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் பொல்லாதவன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆடுகளம் படமும் இவர்களின் கூட்டணியில் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்திற்கு பின் வடசென்னை, அசுரன் என மீண்டும் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தனர். இதில் வடசென்னை 2 அன்பின் எழுச்சி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
வடசென்னை 2 குறித்து பேசிய வெற்றிமாறன்
ஏற்கனவே இப்படத்தின் பல காட்சிகள் எடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற திருச்சிற்றம்பலம் இசை வெளியிட்டு விழாவில் வடசென்னை 2 குறித்து வெற்றிமாறன் பேசியுள்ளார்.
இதில், வடசென்னை 2 படத்தின் 40% சதவீத காட்சி தங்களது கையில் உள்ளதாகவும், தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். விரைவில் நானும் தனுஷும் இணைவோம் என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
கண்டிப்பாக இந்த கூட்டணியில் அடுத்ததாக வடசென்னை 2 வெளிவரும் என பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..