ஒரு நாளைக்கு 150 சிகரெட் பிடிப்பேன் - இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படை பேச்சு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
இவருடைய இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்தார்.
அதில் ஒன்றாக " எனது 13வது வயதில் நான் கிகரெட் பிடிக்க துவங்கினேன். பொல்லாதவன் படத்தின் போது, ஒரு நாளைக்கு 150 முதல் 160 கிகரெட் பிடிப்பேன்.
ஆனால், எப்போது நான் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேனோ, அப்போது இருந்து நான் கிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன் " என்று வெளிப்படையாக கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.