முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் தல ! விபத்து காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்ட படம்..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள வலிமை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான நாங்க வேற மாறி பாடல் நேற்று வெளியாகி யுடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தல அஜித் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் ஆஞ்சநேயா, இப்படத்திற்கு முன்பே தல அஜித் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டியது.
ஆம், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடித்த வந்த திரைப்படம் மஹா, 8 நாட்கள் நடந்த அப்படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் காட்சியின் போது அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தொகுப்பாளர் ஜீவா, வைரமுத்து, கன்னல் கண்ணன் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியிருக்க வேண்டியதாம்.