விக்னேஷ் சிவன் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்க தான் இப்படி பதிவிட்டாரா?
வாடகைத்தாய் சர்ச்சை
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள், துபாய் என சுற்றிக்கொண்டிருந்தனர். அதன் பின் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்தனர்.
திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை எப்படி என எல்லோரும் கேள்வி கேட்க அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. திருமணம் ஆகி 5 வருடங்கள் கழித்து தான் முறையை பயன்படுத்த வேண்டும் என சட்டம் இருக்கும்போது, அவர்கள் சட்டத்தை மீறி இப்படி செய்தார்களா என சர்ச்சை வெடித்தது.
விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசும் தெரிவித்து இருக்கிறது. இருப்பினும் நயன்தாரா தரப்பு இதுவரை எந்த விளக்கமும் இந்த சர்ச்சை பற்றி தெரிவிக்கவில்லை.

விக்னேஷ் சிவனின் பதிவு
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இதை அவர் சர்ச்சைக்கு பதிலடியாக தான் அவர் இப்படி பதிவிட்டாரா?
