40,000 அடி உயரத்தில் பிரியாணியும் நாட்டுக் கோழியும்.. நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இப்போது அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு தெலுங்கில் படம் நடிக்கும் அறிவிப்பு வந்தது. சிரஞ்சீவியின் 157வது படத்தில் நாயகியாக நயன்தாரா கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தை தாண்டி யாஷ் நடிக்கும் டாக்சிக், மண்ணாங்கட்டி சிங் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி என தொடர்ந்து நிறைய படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.
வீடியோ
இந்த நிலையில் நயன்தாராவின் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
40,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, “பிரியாணி மற்றும் நாட்டு கோழியை வீட்டில் இருந்து எடுத்து வந்து சாப்பிட தயாராகி உள்ளோம்,” என ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.