சினிமாவால் படிப்பை இழந்தேன், குடுப்பதுடன் இருக்க முடியவில்லை.. நடிகர் விஜய் பேட்டி
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். ராஷ்மிகா, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், குஷ்பூ, பிரபு, சரத்குமார் என பல நட்சத்திரங்கள் ஒன்றிணைத்து இப்படத்தில் நடிக்கிறார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் விஜய் பல ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படத்திற்காக தான், இயக்குனர் நெல்சனுடன் நேர்காணலில் வந்தார்.
கேள்விக்கு பதிலளித்த விஜய்
ஆனால், பல வருடங்களுக்கு முன் தனது ரசிகர்களுக்காக பல நேர்காணல்களில் கலந்துகொண்டார். ஏன், தனது ரசிகர்களிடம் சேர்ந்து கூட நேர்காணலில் பங்கேற்றார். அதில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் விஜய் பதிலளித்து வந்தார். அதில், நீங்க சினிமாவிற்கு வந்ததால், உங்கள் வாழ்க்கையில் என்ன விஷயத்தை இழந்தீர்கள் என்று ரசிகை ஒருவர் விஜய்யிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த விஜய் " நான் சினிமாவிற்கு வந்ததால், படிப்பை இழந்தேன். என் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விட்டது. இப்படியெல்லாம் சோகமாக பதில் சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா என்று Thug லைப் செய்தார் விஜய். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Thug life la king @actorvijay 😂❤ #Varisu pic.twitter.com/myJViVXomc
— Jilla Karthi ツ (@vjfan360) June 25, 2022