போட்டோ பயன்படுத்த அனுமதி கொடுத்த விஜய்.. தேர்தலில் களமிறங்கும் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது படங்களில் தியேட்டர்களில் வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் தற்போது நேரடியாக மக்கள் இயக்கம் மூலமாக அரசியல் களத்திலும் இறங்கி இருக்கின்றனர்.
கிராமபுற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றதாக செய்தி வெளியானது உங்களுக்கு நினைவிருக்கும். இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர்.
விஜய் தன் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்து இருக்கிறார் என பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.