ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சனைக்கு நான் காரணமா.. வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி
ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் சென்னையில் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட் பெரிய சர்ச்சையில் சிக்கியது. அதில் பல ஆயிரம் பேர் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் வாகனங்களால் அந்த பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. இது பெரிய சர்ச்சை ஆகி பலரும் ஏஆர் ரஹ்மான் மோசடி செய்துவிட்டார் என விமர்சித்தனர். ரஹ்மான் மீது எந்த தவறும் இல்லை, ஏற்பாட்டாளர்கள் சரியான ஏற்பாடுகளை செய்யாதது தான் காரணம் என ரஹ்மானுக்கு ஆதரவாகவும் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
விஜய் ஆண்டனி காட்டமான அறிக்கை
இந்நிலையில் ரஹ்மான் நிகழ்ச்சிக்கு போலி டிக்கெட் விற்றவர்கள் உடன் விஜய் ஆண்டனியும் கூட்டு, இந்த சர்ச்சையை பெரிதாக்க அவர் சிலருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என youtube சேனல் ஒன்றில் பெண் ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"அது முற்றிலும் பொய்யே" என குறிப்பிட்டு அந்த வீடியோ வெளியிட்ட சேனல் மீது வழக்கு தொடர் போவதாக விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.