பாகிஸ்தான் ஆதரவாக பேசினேனா.. விஜய் ஆண்டனி வெளியிட்ட புது அறிக்கை
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் மக்களும் அமைதியை விரும்புகிறார்கள், அவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டு இருந்தார்.
புது அறிக்கை
பாகிஸ்தான் பற்றி இப்படி பேசியதால் சமூக வலைத்தளங்களில் விஜய் ஆண்டனியை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்து புது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டவர்களுக்கு என குறிப்பிட்டு அந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ.