ஜீ தமிழில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. TRP எகிறப் போகுது
தொலைக்காட்சி
ஓடிடி கலாச்சாரத்திற்கு பின் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சேர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது சமீபகாலமாக குறைந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம் முடிந்தது.. கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த கல்யாணம், வீடியோ இதோ
ஆனால், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றால், கண்டிப்பாக அந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பார்கள். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை தான் இது.
மெர்சல்
ஏனென்றால் வரும் ஞாயிறு அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான மெர்சல் ஒளிபரப்பாகவுள்ளது.

ஆனால், இந்த திரைப்படம் இந்தியாவில் ஒளிபரப்பாகவில்லை. சிங்கப்பூரில் மாலை 5 மணிக்கும், மலேசியாவில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என ஜீ தமிழ் அறிவித்துள்ளனர்.

ஆகையால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா தளபதி ரசிகர்களே மெர்சல் படத்தை குடும்பத்துடன் சேர்ந்து தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.