டாக்சிக் உறவிலிருந்து வெளியேற அவர்தான் உதவினார்.. திருமணத்திற்கு முன் ராஷ்மிகா கூறிய விஷயம்
ராஷ்மிகா மந்தனா
பான் இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்தன.

அடுத்ததாக இவர் நடிப்பில் மைஸா மற்றும் Cocktail 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வருகிற 26ஆம் தேதி உதய்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தை பணியமர்த்தி இருக்கிறார்களாம். இதுவரை தங்கள் திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக ராஷ்மிகா அறிவிக்காமல் இருந்த நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'Wedding of VIROSH' என பதிவு செய்திருந்தார்.

ராஷ்மிகா கூறிய விஷயம்
திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், "என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு கடினமான கட்டத்தை எதிர்கொண்டேன். உணர்ச்சி ரீதியாக மிகவும் சோர்வாக இருந்தேன். அந்த நேரத்தில் விஜய் தேவரகொண்டாதான் எனக்கு உறுதுணையாக இருந்து, மோசமான டாக்சிக்கான உறவிலிருந்து வெளியேற உதவினார். அது எனக்கு புதிய நம்பிக்கையையும் முன்னேறும் தைரியத்தையும் அளித்தது" என கூறியுள்ளார்.